2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரு தேவாலயங்கள் தனிமைப்படுத்தலில்

Princiya Dixci   / 2021 மே 02 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி, பக்தர்களை ஒன்றுகூட்டி திருவிழா, திருப்பலி நடைபெற்ற இரு தேவாலயங்கள், இம்மாதம் தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு தேவாலயங்களுமே நேற்று (01) காலை  திருவிழா, திருப்பலி நடைபெற்றமையால் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 14 நாட்களுக்கு மேற்படி இரு தேவாலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X