2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இறங்குதுறையை ஆழப்படுத்தி புனரமைத்துத் தரவும்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி பூநகரி இரணைமாதாநகர் மீன்பிடி இறங்கு துறையை ஆழப்படுத்தி புனரமைத்துத் தருமாறு, மேற்படி கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள இரணைமாதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடற்தொழிலாளர்கள் தமது படகுகளை கடலுக்கு தொழிலுக்கு கொண்டு செல்வதற்கும் படகுகளையும் வலைகள் மற்றும் ஏனைய கடற்தொழில் உபகரணங்களை கரைசேர்ப்பதிலும் கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே குறித்த இறங்கு துறையை ஆழப்படுத்தி புனரமைத்துத் தருமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசசார்பற்ற நிறுவனமொன்றின் நிதியுதவியுடன் கடந்த 2013ஆம் ஆண்டு குறித்த இறங்குதுறை புனரமைக்கப்பட்டபோதும் படகுகளை கரைசேர்க்கும் பகுதி ஆழம்குறைந்த பகுதியாக காணப்படுவதாகவும் இதனை மீள்புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .