2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலஞ்சம் பெற்ற உத்தியோகத்தர் சிக்கினார்

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு, பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட உதவிக்கு, இலஞ்சம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கையும் மெய்யுமாக பிடிப்பட்டச் சம்பவமொன்று, கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில், நேற்று  (14) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் கிருஷ்னேந்திரனிடம் ​தொடர்பு கொண்டு வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், மேற்படி சம்பவம் உண்மையென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, தமக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைப்பதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .