2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இளைஞன் மீது தாக்குதல்; ஒருவர் மடக்கிப்பிடிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் நேற்று இரவு மூன்று வீதியோரம் நின்ற இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியோரில் ஒருவரை, ஊர் இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது, 3 மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்துக்கட்டி வந்து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடும்போதே இளைஞர்கள் விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப்பிடித்தனர். ஏனையவர்கள் தப்பி சென்றுய்யனர்.

மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞர் சுமார் 23 வயது மதிக்கத்தக்கவர் எனவும்  மதுபோதையிலும் காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் துணிகளால் மூடிக்கட்டப்பட்டு முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கானவர், மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

மடக்கிப் பிடிக்கப்பட்ட தாக்குதல்தாரி மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .