2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உண்ணாப்பிலவில் கொள்ளை: மூவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (19) அதிகாலை இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார்,) தெரிவித்தனர்.

முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று (19) அதிகாலை வேளையில் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்து 47 பவுண் நகை, 3 இலட்சத்தி 70 ஆயிரம் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அத்துடன், கொள்ளையர்களின் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கள்ளப்பாட்டு பகுதியைச் சேர்ந்த  மூவரைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .