2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் கைது

க. அகரன்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து 2 கிலோகிராம் கஞ்சா கடத்திச் சென்ற இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று (29) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து  சோதனை மேற்கொண்ட பொலிஸார் அதில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 21, 28 வயதுடைய இரு இளைஞர்களை 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன்; கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X