2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைதானார்

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வவுனியா பஸ் நிலையத்தில், 1 கிலோ 8 கிராம் கஞ்சாவுடன் 60 வயதுடைய நபரொருவர், இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

வவுனியா பஸ் நிலையத்திலிருந்து அநுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .