2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடலட்டைகளுடன் அறுவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகளுடன் 06 நபர்கள், கடற்படையினரால், நேற்று  (03) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், 23, 33 வயதுடையவர்களெனவும் இவர்கள் மன்னார், கொண்டச்சிக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 977 கடல் அட்டைகள், 02 டிங்கிகள், 02 ஓ.பி.எம்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X