2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடைத்தொகுதியில் தீ விபத்து

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி சந்தி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள  5 கடைகளைக் கொண்ட கடைத்தொகுதியொன்று, இன்று (24) அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

குறித்த கடைத்தொகுதியில், இன்று (24) அதிகாலை 1 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுமக்களின் உதவியுடன் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத்தீ விபத்து காரணமாக, குறித்த கடை தொகுதியில் அமைந்துள்ள இரு கடைகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. ஏனைய 3 கடைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனால், எருக்கலம்பிட்டி சந்தியில் இருந்து தலைமன்னார் வரையான தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .