2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கணவாய் பிடித்தவர்களுக்கு பிணை

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில், குளைபோட்டு கணவாய் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையால் கைதான உள்ளூர் மீனவர்கள் ஒன்பது பேரையும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி, நேற்று (15) அனுமதி வழங்கினார்.  

அத்துடன், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

பருத்தித்துறை - கிழக்கு தும்பளை மற்றும் முனை பகுதிகளில், கடற்படையினரும் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, குளை போட்டு கணவாய் பிடித்த குறித்த ஒன்பது மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து 4 படகுகள் கைப்பற்றப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .