Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பில், குளைபோட்டு கணவாய் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையால் கைதான உள்ளூர் மீனவர்கள் ஒன்பது பேரையும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல, பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி, நேற்று (15) அனுமதி வழங்கினார்.
அத்துடன், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பருத்தித்துறை - கிழக்கு தும்பளை மற்றும் முனை பகுதிகளில், கடற்படையினரும் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, குளை போட்டு கணவாய் பிடித்த குறித்த ஒன்பது மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 படகுகள் கைப்பற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago
7 hours ago