2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கம்பரின் நினைவு தினம்

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவு தினம், வவுனியா - சூசைப்பிள்ளையார்குளத்தில் அமைந்துள்ள கம்பரின் சிலைக்கருகில், இன்று (21) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் தவிசாளர் இ. கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழருவி த. சிவகுமாரன், தமிழ் மாமணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், நகரசபை உறுப்பினர்கள்,  சமூக ஆர்வலர்கள், நகரசபையின் செயலாளர் இ. தயாபரன், உப தவிசாளர் சு. குமாரசுவாமி, தமிழ் மா மன்றத்தின் உறுப்பினர்கள் வைத்திய கலாநிதிகளான செ. மதுரகன், கிருபானந்தகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .