2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு நாளை முதல் சிக்கல்

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

உரிய முறையில் கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள், நிறுவனங்களுக்கு எதிராக திங்கட்கிழமை (நாளை) முதல் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று, மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், நேற்று  (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், உணவு கையாலும் நிலையங்கள், உணவு உட்கொள்ளும் இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையை தவிர அதிக எண்ணிக்கையில் மக்களை உணவகங்கள், கடைகளினுள் வைத்திருக்கின்றமை பாரிய ஆபத்தை ஏற்படுத்துமென்றார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வராங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .