Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி. தபேந்திரன், எஸ்.என்.நிபோஜன், சுப்ரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிலுள்ள மக்களுக்கான நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா, அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உள்நாட்டலுவல்கள் அமைச்சன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடு சேவையில் பல்வேறு திணைக்களங்களின் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா, “யுத்தம் நிறைவுற்றது எனக் கூறிக்கொண்ட கடந்த கால அரசாங்கம், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரைக் கொலை செய்தே குறித்த வெற்றியை நாட்டியது. மக்களின் வாக்குகளால் ஆட்சியேறிய அரசாங்கங்கள், அதே மக்களை அழித்தே யுத்தத்தில் வெற்றி கொண்டன. இன்று ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கியிருந்தோம். அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. அவருக்கு இப்போதே சக்கர நாற்காலி வழங்கப்படுகின்றது. யுத்த வெற்றி கொண்டாடிய அரசாங்கம், இவர்கள் போன்றோருக்கு எதையும் செய்யவில்லை. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டும் மூன்று ஆண்டுகளின் பின்னரே, இவருக்குச் சக்கர நாற்காலி கிடைத்துள்ளது. இவ்வாறு பலர் அங்கவீனர்களாகவும் அநாதைகளாக்கப்பட்டவர்களாகவும் இங்கு உள்ளனர். இவர்களை போன்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே குறிப்பிடுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்கவே இவ்வாறான நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக” தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், “யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு தேவைகளுடன் மக்கள் உள்ளனர். காணிப் பிரச்சினை, வீட்டுத் திட்டப் பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய தேவைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசாங்கம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், “கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம். இவர்கள் யுத்தத்தின்போது பல்வேறு இழப்புக்களை சந்தித்தவர்கள், வீடுகள் முழுமையாக வழங்கப்படவில்லை. கிளிநாச்சி மாவட்டத்துக்கு மாத்திரம் 14,000 வீடுகள் தேவையாக உள்ளது. குடிநீர்ப் பிரச்சினை உள்ளிட்டவற்றிற்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago