2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வடமகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ஜெனமேஐயந் ஆகியோரின் ஏற்பாட்டில், டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வசிக்கும் குடும்பங்களின் நிதிப் பங்களிப்பில், புதுக்குடியிருப்பு - வேணாவில் பகுதியில் வாழும் வறுமைகோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, வேணாவில் வண்ணன் சனசமூக நிலையத்தில், நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ஜெனமேஐயந், ஓய்வுபெற்ற கிராம அலுவலகர் வே.பரமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X