2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களைகளால் சிரமம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை   பூர்த்தியடைந்துள்ள நிலையில், வயல்களில் பயிர்களுக்கு நிகராக களைகள் காணப்படுவதாகவும், அவற்றை கிருமி நாசினியூடாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெற்பயிர்களுடன் கோரை, கோழிச்சூடன், நெற்சப்பி போன்ற களைப்புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன.

எனினும் குறித்த களைகளை கட்டுப்படுத்த  பல்வேறு விதமான  கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்ட போதும், குறித்த கிருமி நாசினிகளுக்கு குறித்த களைகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .