2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘காணிப் பிணக்குகள் தொடர்பில் 88 முறைப்பாடுகள்’

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

செட்டிகுளத்தில், காணிப் பிணக்குகள் தொடர்பில், 88 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர்,. இதில் முதற்கட்டமாக 40 பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடலும் விசாரணைகளும், செட்டிகுளம் பிரதேசச் செயலகத்தில், சனிக்கிழமை (23) காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை இடம்பெறுமெனவும், இது தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்றைய தினம், காணிப் பிணக்கு உடையோர் வருகை தந்து, புதிய முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியுமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .