2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாசவின் உத்தரவின் பேரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி  மக்களுக்கு, வீட்டுத்திட்டம் வழங்குவதாக உறுதி அளித்ததன்  பிரகாரம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  உமையாள்புரம் பகுதியில், முதல்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு, ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகளை வழங்குவதற்கு, இன்று 11 மணியளவில் நிகழ்வு ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஆளுநரின் செயலாளர், மேலதிக செயலாளர், வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், திணைகளங்களின் அதிகாரிகள், பயனாளிகள் மக்கள் எனப் பலரும் உரிய நேரத்திற்கு வருகை தந்து காத்திருந்த போதும், வீடமைப்பு அதிகார சபயின் தலைவர் வருகைதர தாமதமானதால், அனைவரும் ஒரு மணித்தியாலம் காத்திருந்தனர்.

சுமார் 12 மணியளவில் குறித்த அதிகார சபையின் தலைவர் வருகைதந்ததன் பின்னரே, நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X