2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காற்றால் மின்சாரம் தடை

Editorial   / 2020 மே 22 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், நேற்று (21) காலை முதல் வீசிய பலத்த காற்று காரணமாக, பூநகரி - குடமுருட்டி பகுதியில் உள்ள மினம்பங்கள் முறிந்து வீழ்ந்தன. இதனால் ஆறு மின்கம்பங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக, பூநகரிப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி - இரத்தினபுரம் சித்தி விநாயகர் கோவிலுக்கு முன்பாகக் காணப்பட்ட பாரிய பாலை மரமொன்று வீழ்ந்ததன் காரணமாக, இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தமையால், வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டது. அத்துடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .