2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறக்கப்படும்

எஸ்.என். நிபோஜன்   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம், கிராமிய பொரளாதார அலவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபாச சிறிசேனவால், எதிர்வரும் 14ஆம் திகதி திறந்து வைக்கப்படவள்ளது.

இந்நிகழ்வுக்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்  கரிசனின் பங்கபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம். மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், முப்படைகள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து அமைச்சர், விசேட பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .