2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிளிநொச்சியில் ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் பஸ் ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர், இன்று (11) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 1 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்தில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X