Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 07 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
சுழிபுரம் மாணவியின் படுகொலையை கண்டித்து, கிளிநொச்சி - முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்களால், நேற்று (06) கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி, பரந்தன் - முல்லை வீதியூடாக, முரசுமோட்டை இரண்டாம் கட்டாய சந்தி வரைச் சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கன் மிசன் திருச்சபை, கோரக்கன் கட்டு பிரதேச சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்தப் பேரணியில், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago