2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமம்

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

புதுக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு ஒன்பதாம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள், தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக இப்பகுதியில் உள்ள சுமார் 15 குடும்பங்கள், தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு இப்பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றையே பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதிக்கு, முன்னர் பிரதேச சபையினால் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த போதிலும், தற்போது குடிநீர் விநியோகம் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அடிப்படைத் தேவையகளில் ஒன்றாகக் காணப்படும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில், தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .