2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்தவும்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்துமாறு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், அக்கராயனில் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஓர் ஆண்டு காலமாக, கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன் மேற்குப் பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

அக்கராயன் மத்தி, கிழக்குப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல் இடம்பெறவில்லை. இந்நிலையில், அக்கராயன் மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள நீர்த் தாங்கியில் இருந்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாக வேலைகள் தொடங்கப்படவில்லை எனவும், மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .