2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடிநீர்த்திட்டம் திறப்பு

Editorial   / 2017 மே 27 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட  அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)  ரூபாய் 4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட, கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள  சுமார்  நூற்றி ஐம்பது குடும்பங்களின் பாவனைக்கு அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம், வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரனால், இன்று முற்பகல் 11.30 மணியளவில், மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்  சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை,  வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .