2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கூட்டமைப்பினர் சிக்கலுக்குள் விழுந்துவிட்டனர்’

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் சிக்கலுக்குள் மாட்டி தவிக்கிறார்களென, நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

அச்சுவேலி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிலையத்தை, நேற்று ​(22) திறந்துவைத்து உரையாற்றும்போதே, அவர் ​இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த அரசியலில்  எல்லாவற்றையும் மறைமுகமாக பார்க்கும் நிலை உள்ளதெனவும் தங்களுடைய கட்சிக்கு ஆதாரவாகவும் நலன்களுக்காகவும் மக்களை ஏமாற்றலாமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், சமஸ்டி என்பது பெரும்பான்மையினத்தவர்களுக்கு வேண்டப்படாத ஒன்றாக போய்விட்டதெனத் தெரிவித்த அவர், இந்த சொற்பதங்களை வைத்து, பலராலும் பல்வேறு கருத்துகள் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கருத்துகளை வைத்துக்கொண்டு, சில ஊடகங்கள் தங்களது சொந்த விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .