Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
க. அகரன் / 2019 ஜூலை 01 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
கோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் தனது கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிலில் சென்றுள்ளார்.
அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளார்.
இதன் போது கணவன் காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.
அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் கணவரின் உதவியுடன் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
32 வயதுடைய லி. யாழினி என்ற பெண்ணே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago
3 hours ago
4 hours ago