2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளுக்கு அபராதம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு பகுதியில், சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், குப்பைகளைக் கொட்டிய ஐந்து சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்சுதீன், இன்று (12) உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியின் சூழலை மாசுபடுத்தும் வகையில், அப்பகுதியில் சாரதி பயிற்சியை  வழங்கி வரும் ஐந்து சாரதிப் பயிற்சி நிலையங்களால் குப்பைகள் போடப்பட்டன.

இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரால், குறித்த ஐந்து சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .