2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுமி கடத்தல்; குடும்பத்துக்குள் மோதல்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

13 வயது சிறுமியைக் கடச் சென்ற சம்பவத்தால், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் உள்ள இரு குடும்பங்களுக்கு இடையில் கைலப்பு ஏற்பட்ட சம்பவம் ஒன்று, சனிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

இதில், மூவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில், வௌ்ளிக்கிழமை (08)  13 வயதுடைய மருமகள் முறையான சிறுமியை, மாமன் உறவு முறையான நபர் ஒருவர் வவுனியாவுக்கு கடத்தி சென்றுள்ளார்.

குறித்த நபர், அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடு வவுனியா அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், சிறுமியின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமியை வவுனியாவில் கண்ணுற்ற உறவினர் ஒருவர் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதுடன், அழைத்து சென்றது மாமன் எனவும் தெரியவந்துள்ளது.

விடயம் தெரியவந்ததை அடுத்து அழைத்து சென்ற மாமன் மீண்டும் சிறுமயை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோருக்கும் மாமன் முறையிலான் குடும்பஸ்தரின் உறவுகளுக்கும் இடையில் சனிக்கிழமை (09) இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பல், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .