2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மீது குளவிகொட்டு

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 
வவுனியாவில், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒருவர் குளவி-கொட்டுக்கு இலக்காகிய நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வவுனியா - இறம்பைக்குளம் நாகபூசனி அம்மன் கோவிலில், இன்றைய தினம் (04), திருமண நிகழ்வொன்று நடைபெற்றது.
 
இதன்போது, குறித்த கோவிலுக்கு அருகில் இருந்த குளவிகூடு ஒன்று திடீர் என்று கலைந்து,  திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற வவுனியா சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒருவர் மீது  தாக்கியது.
 
இதில் காயமடைந்தவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .