2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுதந்திரபுரத்தில் 14ஆம் திகதி அகழ்வு

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் பகுதியில், அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை, இன்று (09) நேரில் சென்று பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், ஜூலை 14ஆம் திகதியன்று, அப்பகுதியில் அகழ்வு பணியை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

ஜூலை 4ஆம் திகதியன்று, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றைத் துப்புரவு செய்யும் போது, அன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .