2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் பயணித்த வான் விபத்தில் சிக்கியது

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவிலிருந்து தேர்தல் பரப்பரைக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டுத்  திரும்பிய வானொன்று, நேற்று  (12) இரவு விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த சுயேச்சைக் குழு இரு வேட்பாளர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் மக்கள் சந்திப்புகளை நடத்திவிட்டு, கிளிநொச்சி ஊடாக வவுனியாவுக்கு மீண்டும் திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஏ35 வீதியில், மாடுகள் வீதியில் நடந்து சென்றபோது, திடீரென்று சில மாடுகள் வீதியின் நடுப்பகுதிக்கு வந்தமையால், வேட்பாளர்கள் சென்ற வான் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .