2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்திக்கும் முகமாக, செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம், இன்று (21) நடைபெற்றது.

வவுனியா அபிவிருத்திக் குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வீட்டுத்திட்டம், நெல் கொள்வனவு, பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மதுபானசாலைகள், கள் விற்பனை நிலையங்களால் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்போது, ஒரு சில விடயங்களுக்குத் தீர்வு காணுமாறு, குழுத்தலைவரால், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .