2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி நிகழ்வில் குழப்பம்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில், இன்று (18) நடைபெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில், கரைச்சிப் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர முற்பட்டனர்.

இதனால், நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மேற்படி உறுப்பினர்களை சென்று அமருமாறு கூறியதையடுத்து, இரண்டு உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளாது வெளியேறிச் சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .