2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்முகம் தவசீலன்   / 2019 ஜனவரி 21 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) முதல் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரிக்கு வருகைதந்தார்.

இதனையடுத்து 685 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .