2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தங்கம் தோண்டியவர்கள் கைது

சண்முகம் தவசீலன்   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு பகுதியில், விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்திருந்ததாக நம்பப்படும் நகைகளைத் தோண்டிய 11 பேரை, புதுக்குடியிருப்பு பொலிஸார், நேற்று (24) இரவு கைதுசெய்துள்ளார்கள்.

மாத்தறை, கொழும்பு, கண்டி, கொட்டாவ, கடவத்த, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) இரவு 12 மணியளவில் 11 பேர் கொண்ட குழுவினர், இரண்டு கெப் ரக வாகனத்தில், முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு வந்து, தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த  பொலிஸார், தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .