2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தனியார் காணியில் வெடித்துச்சிதறிய குண்டுகள்

Editorial   / 2019 ஏப்ரல் 06 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில, வெடித்துச் சிதறியுள்ளன.

10 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த தனியார் ஒருவருடைய 2 ஏக்கர் வயல் நிலக் காணியில் இருந்த குண்டுகளே, இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளன.

காணி உரிமையாளரால், இன்று சண்பகல் காணி துப்புரவு செய்யப்பட்டு தீ மூட்டப்பட்டது

இதன்போது காணி நிலத்தில் மறைந்நிருந்த இருந்த குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி உரிமையாளரும் வேலையாட்களும் பற்றைகளுக்கு தீ மூட்டிய பின்னர் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றிருந்ததால், தெய்வாதீனமாக அவ்விருவரும் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .