2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தொடர்ந்து மழை பெய்தால் அபாய நிலைக்கு மாந்தைத் தள்ளப்படும்’

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில், நேற்று (04) இரவு 251.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் விவசாய சம்மேளன தலைவருமான ம.தயாநந்தன், தொடர்ந்தும் மழை பெய்யுமானால், மாந்தை கிழக்கு பிரதேசம் அபாய நிலைக்குத் தள்ளப்படுமெனவும் கூறினார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், பனங்காமம், நெட்டாங்கண்டல் ஆகிய பகுதிகளில் தொடர்சியாக மழை பெய்து வருவதாகவும் சுமார் 25 வரையான குளங்கள் கலிங்கு பாய்கின்றனவெனவும் தெரிவித்தார்.

வவுனிக்குளத்தின் நீர் மட்டம், இன்று (05) காலை வரை 16 அடி 03 அங்குலமாக உயர்ந்துள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .