2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

துணுக்காய் - கல்விளான் பகுதியில், இன்று (24) அதிகாலை, சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியுடன், 50 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி ஒன்றை மீட்கப்பட்டனர்.

இதை அடுத்து அருகில் உள்ள வீட்டின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்,நாளை (25) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .