2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிர்வாகத்தை புதிதாக தெரிவு செய்யவும்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தை புதிதாக தெரிவு செய்யுமாறு கிராம மக்கள் கரைச்சி பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தற்போதுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகம் புதிய நிர்வாகத் தெரிவுகளை குழப்பி வருவதாகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தெரிவு நடைபெறவுள்ளதென அறிவிப்பார்கள்.

தெரிவுக்காக மக்கள் செல்கின்ற போது குறித்த கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகம் பணம் கட்டி அங்கத்தவர்களாக சேர்ந்தவர்கள் மட்டும்தான் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்படும்.

அதன் காரணமாக கிராம அபிவிருத்திச் சங்கத் தெரிவுக்கு வருகைதரும் மக்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

தற்போதுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கரைச்சி பிரதேச செயலாளரிடம் ஆனைவிழுந்தான் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக கிராம அபிவிருத்திச் சங்கத்தில் சில நபர்கள் நிர்வாகத்தில் இருப்பதன் காரணமாகவே, கிராமத்தில் பல்வேறு முறைகேடான செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் இதனைத் தவிர்ப்பதற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .