2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நீரைப் பரப்பினால் தீர்வு கிட்டும்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கரியாலைநாகபடுவான்குளம், முழங்காவில்குளம் என்பவற்றில் நீரைப் நிரப்புவதன் மூலம், முழங்காவில் பிரதேசத்துக்கான குடிநீர் நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என, முழங்காவில் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முழங்காவில் கிராமத்தில் கடந்த காலங்களில் ஆழ் துளைக் கிணறுகளில் இருந்துதான் விவசாய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது ஆள் துளைக் கிணறுகளின் நீர் மட்டம் கூடப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை காலமும் விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்கள், விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூட்டங்கள் நடாத்துகின்றபோது, முழங்காவில் கிராம மக்கள் மட்டும்தான், ஆழ்துளைக் கிணறுகள் பொருத்தமற்றதெனத் தெரிவிக்கின்றனர் எனவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .