2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீர்த் தட்டுப்பாடே இடம்பெயரக் காரணம்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டக் குடியிருப்பில் காணப்படுகின்ற நீர்த் தட்டுப்பாடே, மக்கள் குடியிருப்பில் இருந்து இடம்பெயர முக்கிய காரணம் என, அப்பகுதி பொதுஅமைப்புகள் தெரிவித்துள்ளன.

2010ஆம் ஆண்டில், உயிலங்குளத்தில் இந்திய வீட்டுத் திட்டத்தின் மூலம், ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. மக்கள் குடியேற்றம் செய்யப்படும் போது, அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும் என, அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதும் இக்குடியிருப்பில் காணப்பட்ட நீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மேற்படி குடியிருப்பில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்து உள்ளன என, பொதுஅமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .