2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நெல் கொள்வனவுக்கு நடவடிக்கை’

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து, காலபோகத்தில் அறுவடைச் செய்யப்படும் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அவர்கள் அறுவடைச் செய்யும் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, ஏற்கெனவே களஞ்சியங்களில் இருந்த நெல் யாவும் விநியோகிக்கப்பட்டுள்ளனவெனவும், கூறியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவுச் செய்வதற்கு, அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் இதனால் தாங்கள் நட்டத்தை எதிர்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .