2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நேர்முகத்தேர்வு பிற்போடப்பட்டது

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில், இன்று (24) நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வுகள், மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக, வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா வளாகத்தில், இன்று (24) பிரயோகப் பீடம், தொழில்நுட்பத்துறைக்கான தற்காலிக விரிவுரையாளர்கள், செய்முறை காட்டுனருக்கான நேர்முகத்தெரிவுகள் என்பன நடைபெற ஏற்பாடாகியிருந்தன.

எனினும், தவிர்க்கமுடியாத காரணங்களால், அவற்றை பிற்போட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர், பிற்போடப்பட்டுள்ள நேர்முகத்தெரிவுகள் இடம்பெறும் திகதி பின்னர் அவிக்கப்படுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .