2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

படையினர் முகாமைப் பாதுகாக்க நடவடிக்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைமடுக்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் காரணமாக நீர் ஏந்து பரப்பளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி இராணுவ தலமையகத்தின் சில பகுதிகள் இரணைமடு குளத்தினுள் சென்றுள்ளது. இதனால் குளத்தில் நீர், முகாம் அமைந்திருந்த சில பகுதிகளை சூழ்ந்துள்ளது. குறித்த குளத்தின் நீர் முகாமுக்குள் வராது தடுக்க படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது, 35.8 அடியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .