2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பண்ணையாளருக்கு மறியல்

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் விவசாயப் பண்ணையாளர் ஒருவரை, மே மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (14) இரவு, குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து முறிப்பு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, அவர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X