2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பில் புதிய கட்டுப்பாடு

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொதுச்சந்தைகள், இறைச்சிக் கடைகள் என்பற்றை அண்மித்த பகுதிகளில், கடல் உணவுகள், மரக்கறிகள், இறைச்சிகள் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள் அமைந்துள்ள 1 கிலோமீற்றர் வரையான பகுதிகளில். மரக்கறிகள், கடலுணவுகள், இறைச்சி வகைகள் என்பன வர்த்தக நிலையங்களிலோ வீதியோரங்களிலோ விற்பனை செய்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .