Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Yuganthini / 2017 ஜூன் 26 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
முழங்காவில் - நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள பலசரக்குக் கடை ஒன்று, இன்று (26) அதிகாலை 12.30 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.
இதன்போது, கடையில் இருந்த சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12.45 மணியளவில், குறித்த கடை தீப்பிடித்து எரிவதாக, கடை உரிமையாளருக்கு கிடைக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த கடை உரிமையாளர், சம்பவம் தொடர்பில், இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும், தீயணைப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இராணுவம் மற்றும் கடற்படையின் நீர்த்தாங்கி வாகனங்களும் தீயணைப்புப் பிரிவின் வாகனமும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், குறித்த கடை, முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
திட்டமிட்ட வகையிலேயே, மேற்படி கடைக்குத் தீ மூட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்ற முழங்காவில் பொலிஸார், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago