2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாடசாலை மாணவிகளுக்கு இடையூறு: பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பாடசாலை மாணவிகளுக்கு இளைஞர்கள் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றமை தொடர்பில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தால் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அண்மையில் (17) நடைபெற்றது. இதன்போது, வள்ளிபுனம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே, இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினம் எழுத்துமூலமாகப் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .