2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் ஆபத்து

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்  

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால், தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக, பிரதேச  மக்கள் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25க்கு மேற்பட்ட  பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளன. இதில் பல முக்கியமான வீதிகளாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்  பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.

இந்த பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடந்த காலங்களில் பல விபத்துகளும் இடம்பெற்று பலரும் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்தப் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின்  நிலைமைகளை கருத்தில் எடுத்து, பாதுகாப்பான ரயில் கடவைகளாக மாற்றுவதற்கு உரிய பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பொது மக்கள்  கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .