Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமது மக்களுக்கு எதிரான விடயங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோமென, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
வவுனியாவில், நேற்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருமானால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு விடயமாகவே அதைப் பார்க்க முடியுமென்றார்.
தாம், அரசாங்கத்துடன் இருப்பது, தமது மக்களுக்கான அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்ப -தற்காகவே தவிர, தமது மக்களைச் சிறுமைப் படுத்துவதற்கல்லவெனவும், அவர் கூறினார்.
எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோமெனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago